2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பெண்ணின் உள்ளங்கையை துளைத்த இரும்புக் கம்பி

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பியொன்று பெண்ணொருவரின் உள்ளங்கையை துளைத்துக்கொண்டு சென்ற நிலையில் அப்பெண் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இன்று நண்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீதுவை -  ரயில் நிலைய வீதியை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்னே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

தனது வீட்டுக் காணியில் மண்வெட்டியால் குழியொன்றை தோண்டும் போது நிலத்தில் புதைந்திருந்த துருப்பிடித்த கம்பியொன்று அப்பெண்ணின் உள்ளங்கையை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஆரம்ப சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான முறையில் கம்பியை அகற்றவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .