2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.பி. மீது தாக்குதல்

Super User   / 2012 ஜூலை 16 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           (சுபுன் டயஸ்)

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி.) எம்.டி.சி. சபரமடுவை தாக்கிய நபர் ஒருவர் அவரின் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு சென்ற ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசேட விசாரணைகள் மூலம் சந்தேக நபரான சனத் தர்மசிறி கைது செய்யப்பட்டதுடன் தங்க மோதிரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், அவருக்கு எதிராக 5 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரின் உடல்நிலை திடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இவர் 1993 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். பொலிஸ் கைவிரல் பதிவு பணியகத்தின் பணிப்பாளராக குறிப்பிடத்தக்க காலம் அவர் பணியாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .