2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீனவர் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து'வடக்கு தெற்கு கலந்துரையாடல்'

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           
   (கே.என்.முனாஷா)


இந்திய றோலர்கள் மற்றும் அரச பாதுகாப்பு நடவடிக்கையினால் வடக்கு மீனவர் சமூகம் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான 'வடக்கு தெற்கு கலந்துரையாடல்' என்ற தொனிப் பொருளிலான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நீர்கொழும்பில் அமைந்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய செயலகத்தில் இடம்பெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அ.ஜேசுதாசன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், 'யாழ்.மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை' என்ற தலைப்பில் வடக்கு கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.தவரத்தினம், 'கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை' என்ற தலைப்பில் வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் விசேட பிரதிநிதி ஜோசப் பிரான்ஸிஸ், 'மன்னார் மாவட்டத்தின் கடற்றொழிலின் தற்கால நிலைமை' என்ற தலைப்பில் வட மாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பின் விசேட பிரதிநிதி நிக்சன் அகியோர் உரையாற்றினர்.

'தென்னிந்திய றோலர்களினால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கம் மற்றும் வாழ்வாதார பிரச்சினை' என்ற தலைப்பில் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சூசை ஆனந்தன்  உரையாற்றியதுடன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேர்மன் குமார மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தெற்கு மக்கள் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .