2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இலத்திரனியல் விற்பனை நிலையத்தில் மோசடி செய்த முகாமையாளர் கைது

Super User   / 2012 ஜூலை 25 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

கட்டனை பிரதேசத்தில் உள்ள இலத்திரனியல் விற்பனை கிளை நிலையமொன்றின் முகாமையாளர் ஒருவர் அந்த நிலையத்திலருந்து 348,000 ரூபா பெறுமதியான இலத்திரணியல் உபகரணங்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக குறித்த விற்பனை நிலையத்தின் நீர்கொழும்பில் உள்ள தலைமையக விற்பனை நிலையத்தின் பிரதான முகாமையாளரான திசாநாயக்க முதியான்சலாகே கயான் மஞ்சநாயக்க என்பவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கட்டானையில் உள்ள விற்பனை நிலையம் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்ன ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நியைத்தில் பணியாற்றிய சந்தேக நபர் அந்த நிலையத்திறகு முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு தவணை அடிப்படையில் உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன்போது வாடிக்கையாளர்களிடம்  பெற்றுக் கொள்ளப்பட்ட அடையாள அட்டை மற்றும் மின்சார கட்டண பட்டியல் போன்ற ஆவணங்களின் போட்டோ பிரதிகளை சந்தேக நபர் மாற்றம் செய்து மீண்டும் போட்டோ பிரதி எடுத்து  கடன் தவணை அடிப்படையில் மோசடியான முறையில் பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் தனக்கு தெரிந்தவர்களுக்கு அந்த உபகரணங்களை விற்றுள்ளார்.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட 5 பற்றுச் சீட்டுக்களுக்கான பணம் திருப்பி செலுத்தப்படாததை அடுத்து தலைமையக விற்பனை நிலையம் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பற்றுச்சீட்டுக்களிலும் பொருட்களை கொள்வனவு செய்தவர்களுக்கான ஆவணங்கள் ஏற்கனவே தலைமையக விற்பனை நிலையத்திலிருந்து சந்தேகநபரினால் திருடப்பட்ட ஆவணங்களாகும் என்பது பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்ப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .