2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வென்னப்புவவில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு வீடு அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


வென்னப்புவ பிரதேசத்தில் ரயில் வீதிக்கு அருகிலுள்ள குடிசையில் வசித்துவந்த குடும்பமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு அன்பளிப்பாக நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

வென்னப்புவ பிரதேசசபைக்கு உட்பட்ட தெற்கு வயிக்கால் சிவில் பாதுகாப்புக் குழுவினராலேயே இவ்வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
சிவில் பாதுகாப்புக் குழுவினர், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளின் உதவியுடன்  இவ்வீட்டைக் கட்டி முடித்தனர்.

இந்நிகழ்வில் வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக்க வீரக்கொடி, வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் அலெக்ஸ் நிசாந்த, எதிர்க்கட்சித் தலைவர் ஜுட் பெர்னாந்து, தெற்கு வயிக்கால் சிவில் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .