2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பு மாநகரசபையின் முன்னால் சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோவினால் இன்றைய மாதாந்த அமர்வின்போது கொண்டுவரப்படவிருந்த பிரேரணை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மாநகரசபை முன்றலில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மாநகரசபையில் கொந்தராத்து அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சிற்றூழியர்களே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சிற்றூழியர்கள் வடிகான் துப்பரவு செய்தல்,  நுளம்பு மருந்து தெளித்தல், வீதிகளில் தாரிடல் போன்ற வேலைத்திட்டங்களுக்காக 6 மாதங்களுக்கு செயற்படும் வகையில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

இந்த வேலைத்திட்டங்களை குறித்த காலப்பகுதியில் நிறைவுசெய்யாமல் அந்த வேலைத்திட்டங்களுக்காக தற்காலிகமாக அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை ஓரிரண்டு தினங்கள் வித்தியாசத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியான முறையில் கடந்த 7 வருடங்களாக  நியமித்து வந்துள்ளதாகவும் இது மாகாணசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய எதிர்காலத்தில் இந்த விடயம் கணக்காய்வுக்கு உட்படுத்தபடலாம் என்பதனால் இந்த  வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறும் வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி மாநகரசபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோவினால் இந்தப் பிரேரணை இன்று முன்வைக்கப்பட இருந்தது.

இதேவேளை, குறித்த பிரேரணையில் மாற்றங்கள் செய்து அடுத்த கூட்ட அமர்வின்போது சமர்ப்பிப்பதாக சபை அமர்வின்போது இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வின்போது ஐக்கிய தேசிய கட்சி மாநகரசபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .