2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் பலி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                  (கே. என்.முனாஷா)
கட்டுநாயக்கா, நைகந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வித்துச் சம்வபத்தில் மையங்கன பிரதேசத்தை சேர்ந்த தினேஸ் ருவன் ரத்நாயக்க (24 வயது),  ரத்நாயக்க முதலியான்ஸலாகே பிரியந்த லால் (28 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .