2026 ஜனவரி 21, புதன்கிழமை

செயற்கை அவயங்கள் உற்பத்தி அபிவிருத்திக்காக ஜப்பான் நிதியுதவி

Super User   / 2012 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


செயற்கை அவயங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வழங்கல் அளவை விஸ்தரிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் சுமார் 3.7 மில்லியன் ரூபா நிதியுதவியை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது.

சமூக நலத்திட்ட நன்கொடை உதவியாக அடிமட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் குறித்த நிறுவனத்திற்கு தேவையான மேலதிக இயந்திரங்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இலவசமாக செயற்கை உபகரணங்களை தேiவாயானோருக்கு வழங்கி வரும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தினால் கொழும்பில் செயற்கை உறுப்பு தயாரிப்பதற்கான செயற்பட்டறைகளை நிறுவதற்கும் விருத்தி செய்வதற்குமாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக வருடாந்தம் 1,000 பேரை சமூகத்தில் மீளிணைந்து கொள்ளவும் சமூக சூழ்நிலைகளை மேம்படுத்திக்கொள்ளவும் நேரடியாக உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நன்கொடை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ மற்றும் கொலம்போ பிரென்ட இன்நீட் சங்கத்தின் தலைவி கல்யானி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X