2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'கணினி மென்பொருள்துறையை ஊக்குவிப்பது காலத்தின் தேவை'

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணினி மென்பொருள்துறையை ஊக்குவிப்பது காலத்தின் தேவையாகும் என்று இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதமர் ரெஷான் தேவப்;புர தெரிவித்துள்ளார்.

2012 சிறந்த மென்பொருட்களை தெரிவுசெய்வதற்கான போட்டி தொடர்பாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப  துறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த முதலீடாக கருதி, இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இவ்வருட போட்டிக்காகவும் தேசிய அனுசரணையை வழங்க நடவடிக்கை எடுத்ததாக தேவப்புர இங்கு கூறினார்.

இந்தப் போட்டிக்காக தமது நிறுவனம் 4வது தடவையாகவும் அனுசரணை வழங்குவதாக தேவப்புர குறிப்பிட்டார்.

இ-அரசாங்கம் மற்றும் சேவைகள், ஊடகம் மற்றும் களிப்பூட்டல்,கல்வி மற்றும் பயிற்சி, பாதுகாப்பு நிதி உட்பட 19 விடயங்களின் கீழ் இந்தப் போட்டி இடம்பெறும்.

இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் தயாரிப்புக்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில்  www.biz2biz.lk    இணையத்தளமும் திறந்துவைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .