2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மியன்மார் ஊடக தூதுக்குழு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


மியன்மார் ஊடக துறையினரை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

இலங்கையின் ஊடக செயற்பாடுகள் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பத்திரிகைத்துறை சார் ஒழுக்கக்கோவை ஆகியன தொடர்பாக அறிந்து கொள்ளும் நோக்கில் இத்தூதுக்குழுவினர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் மற்றும் பத்திரிகை துறையினருக்கான சுய கட்டுப்பாட்டு ஒழுக்கக்கோவை பொறிமுறையின் செயற்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தினர்.

இத்தூதுக்குழுவினர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், பணிப்பாளர் சபை உறுப்பினர் மொஹான் லால் பியதாச, பிரதம நிறைவேற்று அதிகாரி இம்ரான் புர்கான் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் ஆகியோரையும் சந்தித்து ஊடக செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .