2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கண் விழித்தும் அடையாளம் காணமுடியாத நிலையில் சுரேஸ்: பாஸ்க்கரா

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரி 50ஆம் வாட்டுக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் சிறைக்கைதி சுரேஸை ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், அக்கட்சியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, சுரேஸின் மனைவி கவிதா மற்றும் மகனுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.

“மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் என்பவர் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வழக்குத் தவணையின் பின் திடீர் என காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மனைவி கவிதா சுரேஸ் தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கமைய கொழும்பு பெரியவைத்தியசாலை 50ஆம் வாட்டுக்கு சுரேஸ் மாற்றப்பட்டார்.

கொழும்புக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸை இன்று வைத்தியசாலையில் சென்று பார்த்த்தோம். அவரது தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது, மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்..” என பாஸ்கரா அனுப்பி வைத்துள்ள ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .