2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மின்னிணைப்பாளர் பயிற்சி நெறிக்காக அமைச்சுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Super User   / 2012 செப்டெம்பர் 06 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தொழில் நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம் இலங்கை மின்சாரசபையுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள விசேட மின்னிணைப்பாளர் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு  இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான அதிதிகளாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்  டலஸ் அழகப்பெரும, மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் க்றேரோ ஆகியோர்கள்; கலந்து கொண்டனர்.

க.பொ.த சாதரண தரப்பரீட்சையில் கணிதம் மற்றும் மொழி பாடங்கள் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகளை இப்பயிற்சி நெறிகளுக்காக சேர்துக்கொள்ளப்படவுள்ளனர். அதில் தமிழ் மொழி மூலமாக 50 மாணவ மாணவிகளும் சிங்கள மொழி மூலமாக 450 மாணவ மாணவிகளும் சேர்க்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ திலகரத்தின மற்றும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். என். சீ. பெர்டினான்டஸ்  ஆகியோர்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைப் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .