2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுகங்கை திட்டத்தின் கீழ் புதிய நீர்விநியோகக் குழாய்களை பொருத்தவேண்டியுள்ளதால் கொழும்பின்  பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 12 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

மாளிகாவத்தை, பண்டாரநாயக்க மாவத்தை, பாலத்துறை சந்தி, ஜெயத்தவன சந்தி மற்றும் ஏனைய சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

நீரை சேமித்துவைத்து பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை பாவனையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .