2025 ஜூன் 23, திங்கட்கிழமை

களுத்துறை பிரதேச சபை தலைவருக்கு பிணை

Super User   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(பாரூக் தாஜுதீன்)


இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களுத்துறை பிரதேச சபை தவிசாளர் விதான பிரியங்க லஷ்மன் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் விதான பிரியங்க லஷ்மன மற்றும் அவரின் சாரதி இந்திக்க பிரியசாந்த சட்டன் ஆராச்சி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது 200,000 ரூபா காசுப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நான்கு சரீர பிணைகளில் மூவர் அரச அதிகாரிகளாகவும் மற்றையவர் நெருங்கிய உறவினராகவும் இருக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

காணி ஒன்றுக்கு வீதி அனுமதி வழங்குவதற்காக 3 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: நிசால் பதுகே)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .