2025 ஜூன் 23, திங்கட்கிழமை

எரிபொருள் கைத்தொழில் தொடர்பான செயலமர்வு

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


எரிபொருள் கைத்தொழில் தொடர்பான செயலமர்வொன்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கடந்த திங்கட்கிழமை கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

விழிப்பூட்டல் ஏற்பாடாக பெற்றோலியம் கைத்தொழில் அமைச்சோடு இணைந்து இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.
இறக்குமதி கட்டுப்பாட்டு நிறுவனங்களும், இலங்கைச் சுங்கம் பெரிய அளவிலான எரிபொருள் பாவணையாளர்கள் இதில் பங்குகொண்டனர்.

எரிபொருள் துறை தொடர்பான தமது அறிவை வளர்க்க இது துணை செய்யும் எரிபொருள் சந்தை அறிக்கை வருடாந்தம் இச்செயலமர்வோடு இணைந்ததாக பிரசுரிக்கப்படும்.2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்பை நீக்கியதாக பௌதீக உட்கட்டமைப்பு கைத்தொழில்களுக்காக இது நெறிப்படுத்தப்பட்டது.

இந்த ஆணைக்குழு மின்சார கைத்தொழிலை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எரிபொருள் கைத்தொழில் உட்பட பெற்றோலியக் கைத்தொழிலில் நிழல் நெறியினூடாக அரசு இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது.தேவையான சட்டவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. பெற்றோலிய கைத்தொழிலை முழுமையாக இந்த ஆணைக்குழு நெறிப்படுத்த இது ஏதுவாகும்.

பாவணையாளரின் நலன் பேணல், போட்டிகளை முன்னேற்றுதல், செயற்பாட்டில் திறமையை முன்னேற்றுதல், கைத்தொழிலில் பாதுகாப்பையும் சேவை நலத்தையும் முன்னேற்றுதல் போன்றவை இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
எரிபொருள் கைத்தொழிலின் சுதந்திரத்தன்மைக்கு கொள்கை விடயங்களில் நிழல் நெறியாளராக இந்த ஆணைக்குழு பெற்றோலிய ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .