2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ், முஸ்லிம் மக்களின் நொந்துபோன தலைவிதி: சி.பாஸ்கரா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சிக்கூட்டு முடிவானது, கடந்த பலதசாப்த கால தமிழ், முஸ்லிம் இனத்துடனான புரிந்துணர்வின்மையை நிவர்த்தி செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் கானல் நீரானது. சகிக்க முடியாத துன்பத்தையும் வேதனையையும் தருவதாக இந்த முடிவு அமைந்துவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்களுடன் சங்கமித்து வாழ்ந்த முஸ்லிம் இனத்தவர்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசிய போராட்டத்திலும் ஒன்றாகவே பயணித்து வந்ததை மறந்து விடமுடியாது. காலப்போக்கில் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் பிறழ்வுகள் காரணமாகவும் சமூக அந்;தஸ்து பெறும் நோக்குடன் செயற்பட்ட அரசியல் குரோத தலைவர்கள் காரணமாகவும் பாரிய பிளவுகளும் இன மோதல்களும் இடம்பெற்றதை மறுப்பதற்கு இல்லை.

அவை தொடர்ந்த தசாப்த காலத்தில் போர் முடிந்த மூன்று வருடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒர் குடையின் கீழ் பயணிப்பதை மிகவும் பெரும்பாலான மக்கள் விரும்பிய நேரத்தில் இத்தேர்தல் நடைபெற்றது பலரும் ஒற்றுமைக்கான தேர்தல் களமாகவே தமிழ், முஸ்லிம்  மக்கள் பார்த்தனர். அதற்கமையவே மக்கள் தத்தமது சமூகத்தை சார்ந்த பிரதிநிதியை தெரிவு செய்தனர்.

இவ்வேளையில் மக்கள் எதிர்பார்ப்புக்கமைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மேடையில் இத்தேர்தலில் தனித்து நிற்பதால் தான் முதுகெலும்புடன் பேச முடிவதாக கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும், தமிழ் இலக்கியத்தில் வருவது போல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஓர் காந்தர்வ உறவு நிலவுவதாக சிலர் என்னத் தலைப்பட்டதை ஏற்று கொள்ள வேண்டும் என சம்மாந்துறையில் கூறயிருந்தார்.

அத்துடன், கிழக்கு மாநகரசபை கலைப்பு தமக்கு தெரியாது என்றும் கலைத்த பின்பும் தம்முடன் அரசு கதைக்கவில்லை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன போடுகாயா என்று சாய்ந்தமருதில் பேசும் போதும் இறுதியாக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளி விட்டதாகவும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தினர் அரசியல் விடிவையும் அடுத்த தலைமுறையினர் தலைவிதியையும் தீர்மானிக்கும் இத்தேர்தலை நாம் நுணுக்கமாக பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அரச முஸ்லிம் அமைச்சர்கள் தனது இக்கருத்தை இனவாதம் பேசுவதாக கூறுவதாகவும் தமது இனத்தின் மீது நடாத்தும் அடாவடித்தனத்துக் கெதிராகவே தான் பேசுவதாகவும் பல தியாகங்களை தான் செய்வதாகவும் சம்மாந்தறை பிரதான வீதி பிரசாரத்திலும் கூறியிருந்தார்.

அமைச்சர் இப்படி கூறியதன் காரணத்தால் முஸ்லிம் மக்கள் தமது சமூகம் சார்ந்த முஸ்லிம்  காங்கிரஸ் வேட்பாளரையும் தமிழ் மக்கள் தமது சமூகம் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களையும் தத்தமது தெரிவாக எடுத்துக்கொண்டு இரு சமூகங்களும் தமது வடகிழக்கின் இரு கட்சிகளுக்கும் தமது வாக்கை வழங்கி இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கான  தமது தீர்ப்பை வழங்கினர் கிழக்கு மக்கள்.

மக்கள் சிந்திப்பது தாம் ஒற்றுமையாகவும் தமது உரிமைகளை தாம் ஒற்றுமையாக போராடி பெறுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் காலம் இத்தேர்தல் மூலம் பெறப்பட்டதாகவே கருதினர். ஏனெனில் அப்போது தான் அரசியல் தீர்வு வேளையிலும் உதவி கிடைக்கும் போதும் தமிழ், முஸ்லிம் மக்கள் தத்தமது சமூகத்திற்கு பிறழ்வுகள் இன்றி தமக்குள் ஒற்றுமையாக பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தின் போது காந்தி, நேரு போன்றவர்களுடன் ஜின்னா அவர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் என்றும் முரண்பட்டதில்லை ஆனால் தீர்வு விடயத்தில் தனது கருத்தை காரசாரமாக வைத்து தனது சமூகத்தின் தலைவிதியை தீர்மானித்துக் கொண்டார்.

ஆனால் இலங்கையில் தீர்வே எட்டாக்கனியாக உள்ள வேளையில் அரசியல் தலைமை மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயற்படுவதானது மக்களின் ஒற்றுமைக்கு ஏற்படும் பேரடியாக பார்க்க முடிகின்றது. அரசியல் கட்சி தலைமை தமது தமது கட்சி கோட்பாடுகளுக்கு ஏற்ப முடிவெடுப்பது என்பது அவர்களின் சுதந்திரம் அதில் நாம் தலை இட விரும்பாத போதும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் தேவையாகும்.

இதனோடு அடுத்து வரும் சமதாயத்திற்கு இந்த சமுதாயத்தின் வடு சுமையாகவும் தீர்க்கமுடியாத சிக்கலாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் ஜீரணிக்க கூடியதும் அல்ல' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .