2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மக்களின் ஆணைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட்டுள்ளது: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு எதிரான முஸ்லிம் மக்களின் ஆணைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன்  தலைவர் ஹக்கீமும் செயல்பட்டுள்ளனர் என முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.

அம்முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.பைசால் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'அரசாங்கத்திற்கு எதிரான முஸ்லிம் மக்களின் ஆணைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன்  தலைவர் ஹக்கீமும் செயல்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண மக்கள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை நிராகரித்து இருக்கின்ற நிலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கிழக்கில் நிலைநிறுத்துவதற்கு உதவி புரிந்துள்ளார். இது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

தேர்தல் காலங்களில் அரசாங்கத்திறகு எதிராக ஏனைய எதிர்க்கட்சிகளை விட முஸ்லிம் காங்கிரஸ் அதிக குற்றங்களைச் சுமத்தியிருந்தது. தான் கிழக்கில் புதிய வரலாற்றைப் படைக்கப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்து இருந்தது. இவையெல்லாம் நாடகமாகவே கொள்ளப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்கனவே இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொண்டு எதிராகவே போட்டியிடுவதுபோல் முஸ்லிம் சமூதாயத்திற்கு காட்டிவிட்டு  வெற்றி பெற்றவுடன் மீண்டும் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கரஸ் ஒட்டியுள்ளது

ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திருந்தால் அது ஒரு அரசியல புரட்சியாக மாறியிருக்கும். அதை முஸ்லிம் காங்கிரஸ் சிதறடித்துவிட்டது. முஸ்லிம் காங்கிரஸின் இந்த துரோகச் செயல் முஸ்லிம் மக்களை மாத்திரம் அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை.

மாறாக இந்த பேரினவாத தளத்திற்கு எதிராக போராடுகின்ற அனைத்து பிரிவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இத்தகைய வேடதாரிகளை முஸ்லிம் மக்கள் இனம் கண்டு எதிர்காலத்தில் சிறந்த பாடத்தை புகட்டுவதற்கு முன்வரவேண்டும். புதிய அரசியல் தலைமைகளை எதிர்காலத்தில் உருவாக்க முஸ்லிம்  மக்கள் முன்வர வேண்டும்'.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .