2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சாஹிர் நாயிக்கின் மல்வானைக்கான விஜயம் வெற்றிகரமாக இடம்பெற்றது: தொழிலதிபர் ஜிப்ரி

Super User   / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய அறிஞரான சாஹிர் நாயிக் இன்று ஞாயிற்றுக்கிழமை மல்வானை பிரதேசத்திற்கான விஜயம் வெற்றிகரமாக இடம்பெற்றது என மல்வானையை பிறப்பிடமாகவும் சிங்கபூரை வசிப்பிடமாகவும் கொண்ட தொழிலதிபரான பசூல் ஜிப்ரி தெரிவித்தார்.

தொழிலதிபர் பசூல் ஜிப்ரியின் அழைப்பிற்கினங்கவே இஸ்லாமிய அறிஞரான சாஹிர் நாயிக் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அத்துடன் சாஹிர் நாயிகின் இலங்கை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் பசூல் ஜிப்ரியே மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தொழிலதிபரான பசூல் ஜிப்ரி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'மல்வானை அல் - முபாரக் பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பட்டாடில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் இஸ்லாமிய அறிஞரான ஷாகீர் நாயிக் 10 நிமிட சுருக்க உரையொன்றினை ஆற்றினார்.
இதன்போது, முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் சிறப்பான உரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு மிகவும்  வெற்றிகரமானதாக இடம்பெற்றது.

எனினும், சிலர் சாஹிர் நாயிக்கின் மல்வானைக்கான விஜயத்தின் போது குழப்பம் ஏற்பட்டதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .