2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காலியில் மருத்துவ சேவைகள் முடக்கம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியிலுள்ள வைத்தியர்களை காலி மேயர் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹமோதர, கராப்பிட்டிய, காலி  ஆகிய பகுதி வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தமொன்றில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் இவ்வைத்தியசாலைகளின் அனைத்துச் செயற்பாடுகளும்; ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இத்தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவசரசிகிச்சைப்;பிரிவில் பணியாற்றுபவர்கள் தவிர, அனைத்து வைத்தியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இதன்போது, சட்ட ஏற்பாடுகளின் போதாமை காரணமாக வைத்தியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் மேயரை கைதுசெய்ய முடியாதெனக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குற்றஞ்சாட்டப்பட்ட மேயர் மித்சிறி கமகே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.

2000 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 50 இற்கும் அதிகமான பெரிய வைத்தியசாலை மற்றும் 89 சிறிய வைத்தியசாலைகளின் பணியாளர்களும் 19 மருத்துவ அதிகாரி பிரிவுகளும் இவ்வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டுள்ளன. (ஹாபில் பாரிஸ்,டி.ஜி.சுகதபால)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .