2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இளைஞர் செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட இளைஞர் மேம்பாட்டுக்கான செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு - 05இலுள்ள சம்புத்தத்த ஜெயந்தி கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தலைவர் எம்.என்.ஏ. முன்ஸிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில தெற்காசிய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க, சிறுவர் நோய் வைத்திய கலாநிதி முஸ்தபா ரயீஸ்,  இன்ஸைட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹில்மி சுலைமான் மற்றும் அஷ்ஷெய்க் றிழ்வான் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி ஆகியோரினால் செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து 2012ஆம் நடைபெற்ற க.பொ.த (உயர் தர) பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இந்த செயலமர்வு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0

  • Anverdeen Thursday, 04 October 2012 04:19 PM

    மனம் சந்தோசம் அடையும் நல்ல நிகல்ஷி. வாழ்த்துகல். அன்வெர்தேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .