2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பங்களாதேஷில் விகாரை தாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம்

Super User   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(றிப்தி அலி)


பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டிய தொன்றாகும். அத்துடன் இது போன்ற சம்பவங்கள் உலகின் எந்த பகுதியிலும் இனிமேல் நடைபெற கூடாது  எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன தெரிவித்தன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபாரக், பிரதி செயலாளர் தாஸிம் மௌலவி, அம்பாந்தோட்டை மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அர்ஹம் நுரி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"ஏனைய சமயங்களை தாக்குமாறு இஸ்லாத்தில் ஒரு போதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தங்களின் மதம் தாக்கப்படும் போது கொதித்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது. எனினும் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெறமால் இருக்க ஏற்பாடுகளை மேற்கொண்ட வேண்டும்.

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பௌத்தர்களின் பரம்பரையிலிருந்தே வந்தவர்கள். இதனால் எமது நாட்டில் பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகின்றது.  இந்த உறவு தொடர வேண்டும்.

இது போன்றே சர்வதேச நாடுகளிலும் பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் நெருங்கி செயற்பட வேண்டும். இதற்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எவ்வாறாயினும் சுமார் 19 சிங்கள மொழி மூல இணையத்தளங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் செயற்படுகின்றன.

இந்த இணையத்தளங்களை தடை செய்ய வேண்டும் என நாம் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் நவீன சமுக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போலி பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும்" என்றனர்.

ஆப்கானிஸ்தானில் பௌத்த சின்னங்கள் தாக்கப்பட்ட போது இலங்கையில் பௌத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டங்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டமையும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நினைவுபடுத்தப்பட்டது.

இந்த சம்பங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் விசேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இ;ய்யதுல் உலமா சபை நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமையை கண்டித்து முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கொழும்பிலுள்ள இலங்கைகான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியுர் ரஹ்மானை சந்தித்து மனுவொன்றையும் கையளித்துள்ளது.

பங்களாதேஷில் விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இலங்கையில் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வதை போன்று பங்களாதேஷில் பௌத்தர்கள் முழு உரிமையுடன் வாழ அந்நாட்டு அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்களை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றது எனவும் குறித்த இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள்:நொலேஜ் பொக்ஸ்)





You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 03 October 2012 12:02 PM

    வெறும் காகிதத்தில் கண்துடைப்பு. பங்காளிகள் மாதிரி ஒரு மத வெறியர்கள் யாரும் இருக்க முடியாது. இவர்கள் தான் ஆப்கானில் புத்தர் சிலை உடைக்கும் போது இங்கு பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

    Reply : 0       0

    mohamed haniffa Wednesday, 03 October 2012 02:59 PM

    ஒரு மதத்தை அழிக்கவோ நிந்திக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை. அதைவலியுறுத்திக்கூறவே ஜம்மியத்துல் உலமா கண்டனத்தை தெரிவிக்கிறது. அதனை மாசுபடுத்த நினைப்பது இறை கொள்கைக்கு மாற்றமானது.

    Reply : 0       0

    Abu Dawud Wednesday, 03 October 2012 09:43 PM

    பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டதை, இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 04 October 2012 05:02 AM

    நாங்களும் பங்காலிகளுடன் பத்துவருஷமாக பழகிகொண்டே இருக்கிறோம். உலகில் பங்காலிகளைவிட பணிவாகவும் அன்பாகவும் அடுத்தோரை விருந்தாளிகளை கவனிப்போர் யாரும் இருக்கமுடியாது. அவர்கள் வீடுகளுக்கு சென்றால் நாம் காலில் போடும் செருப்பை கூட துடைத்து நாம் திரும்புகையில் வசதியாக போடுவதற்கு ஏற்றவாறு மாற்றி வைப்பார்கள். அவர்கள் நீங்கள் சொல்லுவதைபோல் எந்த மதத்தையும் நிந்தனை செய்யும் வெறியர்களாக கண்டதே இல்லை. இது வங்க-மியன்மார் வம்ச இளைஞர்களின் பழிவாங்கும் செயல் என்றே அங்கே உள்ள பத்திரிகைகள் புலனாய்வு தகவல்களை வெளியிட்டு உள்ளன. எனவே ஒரு குழுவின் செயலுக்காக ஒரு தேசத்தையே குறைகூறுவது அறிவுடமைதானா? மேலும் வெறியனாக எந்த முஸ்லிமும் இருக்க முடியாது. முஸ்லிம் என்றால் நீதியாக நடப்பவன். அப்படி முஸ்லிம் பெயர் கொண்ட எவனாவது அநீதியாக நடந்தால் அவனை முஸ்லிம் என்று அடையாளப்படுத்த அவனுக்கோ பிறருக்கோ எந்த உரிமையும் இல்லை...

    Reply : 0       0

    ZAMEER Thursday, 04 October 2012 05:29 AM

    அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .