2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மகசின் சிறைச்சாலை கலவரத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு சட்டவுரைஞர் சேவையைப் பெற அனுமதி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாருக் தாஜுதின்)

பொரளை மகசின் சிறையில் கடந்த ஜனவரி 25ஆம் திகதி நடைபெற்ற கலகத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 59 சந்தேகநபர்களும் தமக்கு வழக்குரைஞர்களை பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பின் சிறைச்சாலைகள் திணைக்களத்தினூடக சட்ட உதவி திணைக்களத்துடன் தொடர்புக்கொண்டு சட்டவுரைஞர்களின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமென கொழும்பு பிரதான நீதவான் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட சில சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், பல சந்தேகநபர்கள் வழக்குரைஞர்களுக்கு பணம் கொடுக்க முடியாதுள்ளதால் அவர்களின் சேவை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என கூறியதை தொடர்ந்து நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்த பணிப்புறையை வழங்கினார்.

சந்தேகநபர்கள் சிலர், கண்ணீர்ப் புகையிலிருந்து தப்புவதற்;காக ஓடி ஒழிந்த அப்பாவிகள் என அவர் கூறினார். மேலும் 19 பேர் வரையான சந்தேகநபர்கள் தற்போதைய சிறை நிர்வாகத்துடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தமையால் சந்தேகநபர்களாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நீதவான் சந்தேகநபர்களை ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .