2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பேரவாவியை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை: கோட்டாபய ராஜபக்ஷ

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் கொழும்பு, பேரவாவி முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் கதவுகள், நீர் வெளியேற்றும் வாய்க்கால்கள், நீர் வந்துசேரும் அருவிகள் ஆகியன சுத்தமாக்கப்பட்டு அடைப்புக்கள் நீக்கப்படும். அனுமதிக்கப்படாத குடியிருப்புக்கள், கட்டிடங்களால் உண்டான மாசுக்களுக்கும் பரிகாரம் காணப்படும். இச்செயற்றிட்டம் பூர்த்தியானதும் பெய்ராவாவி புதுப்பொலிவு பெற்ற நகருக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையுமெனவும் அவர் கூறினார்.

பத்தரமுல்ல வோட்டர் எஜ் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை சுற்றுச்சூழல் வாண்மையாளர் நிறுவகத்தின் 6ஆவது வருடாந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி 5 வருடகாலத்திட்டமாகும். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகின்றது. இதனூடாக நகரின் வடிகாலமைப்புகளும் வாவிகளும் பெரும் முன்னேற்றத்தைக் காணுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பின் இயற்கை அழகை கெடுப்பவையாக விளம்பரப் பலகைகள் உள்ளன. இவற்றை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவருமாறு மாநகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த சில இடங்களில் இலத்திரனியல் விளம்பரப் பலகைகள் அமைப்பதே பொருத்தமானது. எமது நகரங்களின் பசுமையும் இயற்கையழகும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு விளம்பரங்கள் தடையாக இருக்க அனுமதிக்கக் கூடாதெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .