2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புதிய தொழிற்சங்க சம்மேளனத்திற்கான அழைப்பை வரவேற்கின்றேன்: பிரபா கணேசன்

Super User   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் புதிய தொழிற்சங்க  சம்மேளனத்தை உருவாக்க அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் ஐனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கின்றேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இன்றைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நாட்டில் வாழும் ஏனைய தொழிலாளர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்தில் இம்முறை அதிகளவிலான சம்பளத்தை தொழிலாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த நிலமையில் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமும் ஒரு புரிந்துணர்வுடன் செயல்படுவதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தனியார் தொலைக்காட்சிகளில் வசை பாடும் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பொறுப்பாளர் கே. வேலாயுதம் கூட்டு ஒப்பந்த நேரத்தில் மட்டும் பரஸ்பர ஒற்றுமையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுகின்றார்.

ஆகவே இந்த முறையாவது கூட்டு ஒப்பந்த விவகாரத்திலிருந்து வெளியில் வந்து ஏனைய தொழிற் சங்கங்களுடன் இணைந்து தனது நேர்மையை வெளிகாட்ட வேண்டும். மனோ கணேசனுடன் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்விடயத்தில் இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றோம்.

நண்பர் திகாம்பரமும் இணைந்து செயல்பட தயாராக உள்ளார். இருப்பினும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலிலே பொதுச்சின்னத்தை கோரி தேர்தல் ஒப்பந்தத்தை உருவாக்கி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து போட்டியிடாமல் அவசர முடிவை எடுத்த முன்னால் தலைவர் மனோ கணேசன் இந்த விடயத்திலாவது தீர்க்கதரிசனமாக செயல்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றேன்.

இன்று மலையக கூட்டமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக அறிக்கை காரணமாக முறிவடைந்து போயுள்ளதை நாம் தெரிந்து கொண்டுள்ளோம். மலையக கூட்டு என்று சப்ரகமுவ மாகாண சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன்; இணைந்த மனோ கணேசன் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் உடன் பேச ஏன் முடியவில்லை.

இதிலிருந்து தம் தமது  கட்சிகளுக்குத்தான அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியமேயொழிய தொழிலாளர்களின் நலனை எவரும் முன்நிறுத்துவதில்லை என்பது புரிகிறது. வெறுமனே இலங்கை தொழிலாளர் காஙகிரஸை விமர்சிப்பதும் இவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் மட்டுமே மலையக அரசியல் அல்ல.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தும் எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்றும் வாக்குகளுக்காக அரசியல் செய்வதில்லை. மாறாக கிடைக்கப்பெற்ற வாக்குகளுக்காக மக்கள் சேவை செய்வதே நோக்கமாக கொண்டுள்ளது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .