2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முஸ்லிம்கள் தனியாக உள்வாங்காமை பாரிய குறைபாடு: நோர்வேயிடம் அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 ஒக்டோபர் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான  பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பினரான முஸ்லிம்களின் பரிமாணம் தனியாக உள்வாங்கப்படாதது ஒரு பாரிய குறைபாடு என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த குறைபாடு தொடர்ந்தும் இருந்து வருவகின்றது. இந்த பாரதூரமான குறைபாட்டை இனியும் தாமதிக்காமல் நிவர்த்திக்கப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகும் என அவர் குறிப்பிட்டார்.

நோர்வேயின் இலங்கைக்கான புதிய தூதுவர் கிறீட் லொச்சென்னுக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட வேண்டும். இதற்கு சிறந்த வாய்ப்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு  அமையும். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது மிகவும் அவசியமாகும்.

சமாதான பேச்சுவார்த்தைகளில் முக்கிய ஏற்பாட்டாளராக நோர்வே இருந்து வந்துள்ளது. அந்த நிலைமையில் நோர்வே இப்பொழுது இல்லை. தாம் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சுகளில் ஒன்றான நீதி அமைச்சை ஏற்றிருப்பதாகவும் அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையை பெற்றுள்ள கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருப்பதாகவும்" ஹக்கீம் விளக்கினார்.

நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதில் நோர்வே தூதுவர் அதிக ஆர்வம் செலுத்தினார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டு வரும் புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் பற்றியும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டது குறித்தும் நோர்வே தூதுவர் அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டறிந்து கொண்டார்.

"மரண தண்டனை விவகாரம் உண்மையிலேயே மிகவும் பாரதூரமாக நோக்கப்பட வேண்டியது.  இது பற்றி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தம்முடன் கலந்துரையாடினார். அது பற்றிய ஆவணமொன்றை அனுப்பி வைத்துள்ளோம்.அந்த விடயத்தில் ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியானதாகும் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் பலவருட காலங்களாக இருந்து வரும் கைதிகள் காரணமாக இடநெருக்கடி நிலவுகின்றது" என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் மற்றும் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 18 October 2012 03:16 PM

    முஸ்லிம்கள் தனி தரப்பு பற்றி நோர்வே குறைகூறும் தாங்கள், கி.மா.தேர்தலில் உரிமை, இருப்பு பற்றி கூப்பாடு போட்டு வாக்குகளை பெற்றபின் நீங்கள் செய்ததெல்லாம் "திவிநெகும" சட்டமூல ஆதரவு, உங்கள் கட்சியின் சரணாகதி,பதவிக்கு சோரம் போதல் என்பவற்றிக்கான மீண்டும் உறுதி செய்யப்பட்ட சான்றுதானே......? கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்களை நம்பி முஸ்லிம் சமுகம் வாக்களித்து விட்டு,வைகுண்டம் செல்வது பற்றி கற்பனையை தவிர வேறு என்னதான் செய்யமுடியும்.

    Reply : 0       0

    Jawahir Friday, 19 October 2012 03:49 AM

    மீனவா... இன்னும் நீங்கள் முஸ்லீம்களுக்கு மாதானமுத்தா ஐடியா சொல்வதை நிறுத்தவில்லையா? நீங்கள் ஆலோசனை சொல்லுமளவுக்கு முஸ்லீம்கள் இல்லை. தமிழ் இனவாத பொறிகளுக்குள் விழுவதற்கு இனியும் நாங்கள் தயாரில்லை. பட்ட அடிகளும் ஏமாற்றங்களும் போதும். எங்களுக்குத்தெரியும் எதை தடுக்கனும் எதை விடனும் என்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .