2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்துடன் பேச்சு நடத்த ரணில் தயார்

Super User   / 2012 ஒக்டோபர் 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கு இடையில் தொடரும் மோதலை தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயார் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டமையை கண்டிப்பதாக தெரிவித்த அவர், சுயாதீன நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றின் சுயாதீன செயற்பாடுகளின் உறுதி தொடர்பில் தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X