2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.170 மில்லியன் ரூபா செலவான இந்த வாகனங்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளிளால் கையளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த முசலி பிரதேச சபை, வவுனியா பிரதே சபை, கிண்ணியா நகர சபை, பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் அம்பாறை நகர சபை உட்ப 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கே இந்த கெப் மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் உள்ளூராட்சி மன்ற தலைவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, இலங்கை உள்ளூர் ஆளகை நிறுவனத்தின் பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பொறியியலாளர் எம்.எஸ். நஸீர், புறநெகும திட்ட பணிப்பாளர் கமகே உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .