2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் பனை அபிவிருத்தி சபை ஆகிய நிறுவனங்களின் முதலாம் காலாண்டுக்குரிய செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வு கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் புதன்கிழமை(7) இடம்பெற்றது.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது நாடாளவிய ரீதியில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழுள்ள கைத்தொழிற் பேட்டைகளின் தொழிற்துறை நடவடிக்கைகளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமான பணிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளில் நிறைவு பெற்ற, நிறைவு பெற்று வருகின்ற நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக கிணறு, உள்ளகவீதி, நீர்த்தாங்கி, நீர்விநியோகம் உள்ளிட்ட உட்கட்டுமான பணிகள் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் எதிர்வரும் 11ஆம் திகதி குறித்த பணிகள் தொடர்பில் கைத்தொழிற் பேட்டைகளுக்கு தாம் நேரில் விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து அறியவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மட்பாண்;டம், தும்பு, தோல், கஜூ கித்துள் சார்ந்த தொழிற்துறை நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் மேம்பாடு குறித்து அமைச்சர்; கேட்டறிந்து கொண்டார்.

எதிர்காலத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின்; கீழ் பாக்கு சார்ந்த தொழிற்துறை நடவடிக்கைகளையும் உள்வாங்கி முன்னெடுக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .