2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்றின் ஆலோசனைக் குழுக் கூடத்தில் வியாழ்கிழமை; (8) நடைபெற்றது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்தின் 2011, 2012, வருடாந்த கணக்கறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

இதனிடையே திருகோணமலை மாவட்டத்தில் குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வாழ்வாதார அபிவிருத்தி மேம்பாட்டு செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறைகளின் தேவைப்பாடுகளின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போது வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக அதற்கான திட்டங்கள் திரட்டப்பட்டு உரிய தீர்வு காணப்படுமென கைத்தொழில் அபிவிருத்தி சபை சார்பாக உறுதிமொழி வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி புத்தளம் மாவட்டத்தில கைவினை மற்றும் கைப்பணிசார்ந்த தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையின் ஊடாக மூலதனங்களை வழங்கி துறைசார்ந்தோரை ஊக்கப்படுத்துவதுடன் தொழிற்துறைகளை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, குழுவின் செயலாளர், அமைச்சின் ஒருங்கிணைப்பு அலுவலர் அமைச்சின் சிரேஷ்;ட மேலதிக செயலாளர் திருமதி மங்கலிக்கா, மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, அமைச்சின் இணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி, அமைச்சின் கீழான நிறுவனங்களினது தலைவர்கள் பொதுமுகாமையாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .