2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு அதிவேக பஸ் சேவை தொடர்பாக மக்கள் முறைப்பாடு

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸெட்.ஷாஜஹான்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியினூடாக சேவையில் ஈடுபடுத்தப்படும் நீர்கொழும்பு – கொழும்பு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படுப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியினூடாக பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பெரு வரப்பிரசாதமாகும். இதன் காரணமாக கொழும்புக்கு 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. ஆயினும், தற்போது  நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து  புறப்படும்  போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இதனால் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டுள்ளது. 20 நிமிடங்களில் கொழும்பை சென்றடைவதற்காக ஒரு மணித்தியாலம் காத்து நிற்க வேண்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி, இந்த பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகள்  ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

அதில் நின்றபடி அதிவேக வீதியில் பயணம் செய்வது ஆபத்தானதாகும். அத்துடன், கால அட்டவணைக்கு ஏற்ப  தொடர்ச்சியான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவது அவசியமாகும்.

அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் காலதாமதம் காரணமாக  சாதாரண பஸ்களில் பயணம் செய்யும் நிலையும் பல சமயங்களில் ஏற்படுகின்றன.

எனவே அதிகாரிகள் இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .