2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காதலனின் பெற்றோர் எதிர்ப்பு: யுவதி தற்கொலை

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

காதலனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால் 19 வயது யுவதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(11) தனது வீட்டில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நீர்கொழும்பு, குரணை, சாந்த ஆனா வீதியில் வசிக்கும் பல்லகே தினேஸா தீப்தி என்ற 19 வயது யுவதியே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தற்கொலை செய்து கொண்ட யுவதியின் தாயார் மூன்று திருமணங்களை செய்து கொண்டவராவார்.  அவரது இரண்டாவது கணவருக்கு பிறந்தவரே குறித்த யுவதியாவார். தாயாருக்கு மூன்றாவது கணவருடன் தொடர்பு ஏற்பட்ட போது மகளை கைவிட்டுச் சென்றுள்ளார். 

அதன் பின்னர் தாய் பற்றிய எந்தவித தகவலும் இல்லாத நிலையில் தாயாரின் தங்கையின்(சித்தி) வீட்டில் சிறுவயது முதல் வசித்துள்ளார்.

கல்விப் பொதுத்த தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்ற குறித்த யுவதிக்கு பஙகதெனிய பிரதேசத்தைச் செர்ந்த சங்கீத் என்ற இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களது காதலுக்கு யுவதியின் தரப்பில் எதிர்ப்பு தோன்றாத போதும் காதலின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யுவதி விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தினம் யுவதியின்; சித்தி வெளியில் சென்று வீடு திரும்பிய போது தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

மேலும் யுவதி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியதாககக் கருதப்படும் கடிதம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

'சித்தி, என்னை மன்னிக்கவும். நான் உங்கள் மீது மிகவும் அன்பாக இருக்கிறேன். சங்கீத்(காதலன்) மீதும் நான் மிகவும் அன்பாக உள்ளேன்' என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .