2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு நகைக்கடை பட்டறையில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள நகைக்கடை பட்டறையொன்றுக்கு முகத்தை துணியால் கட்டிக்கொண்டு வந்த மூவர், கடை உரிமையாளருக்கு மிளகாய்த்தூளை தூவி அவரைத் தாக்கிவிட்டு 22 பவுண் தங்கநகைகளை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பட்டறை உரிமையாளரான கிரிஸ்ணன் சிறிகரன்  (வயது 31) என்பவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பட்டறை உரிமையாளர் தெரிவிக்கையில்,

நகை தயாரிப்பு வேலையில் நான் ஈடுபட்டிருந்தபோது, முகத்தை துணியால் கட்டிக்கொண்டு  திடீரென கடையினுள்  நுழைந்த மூவரில் ஒருவர் என்னை தாக்கினார். இந்நிலையில், நான் அவனை எதிர்த்தபோது எனது முகத்தில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தாக்கினார்.

மற்றுமொருவர் எனது முதுகில் சுத்தியால்; தாக்கினார். பின்னர் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர்.

இதன்போது இவர்களில்; ஒருவருடைய சேர்ட்டை நான் கழற்றி எடுத்துவிட்டேன்.  கொள்ளையர்களில் ஒருவர்; தனது செருப்பை விட்டுச் சென்றுள்ளான்.

தாக்குதல் இடம்பெற்றபோது பக்கத்து கடையிலிருந்த ஒருவர், வெளியில் ஓடிச்சென்று பிரதான வீதியில் உள்ள கடையிலிருந்தவர்களுக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து நான் அதிகாலை 3 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் எனக்  கூறினார்.
 இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .