2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கான்ஸ்டபிள் இருவரின் சீருடைகளும் எரிப்பு

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதம் தாங்கிய குழுவினால் குருணாகல், கெட்டுவான சந்தியில் வைத்து கடத்தப்பட்ட போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களின் சீருடைகளும் எரிக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு,திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டிலிருந்து வழக்கிற்கான தடயப்பொருட்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இந்த வீட்டை கடந்த மார்ச் மாதம் வாடகைக்கு பெற்றிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளனர். அந்த தகவல்களின் அடிப்படையிலேயே வீட்டை தேடியறிந்துகொண்டதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
கடத்தப்பட்;ட இருவரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன் மற்றொருவர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .