2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சுங்க அதிகாரி வீட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, ஸ்ரீவிக்ரம ராஜசிங்க வீதியிலுள்ள  சுங்க அதிகாரி ஒருவரின் வீட்டில்  நேற்று செவ்வாய்க்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வானில் வந்த முகமூடி அணிந்த 04 கொள்ளையர்கள்,  குறித்த வீட்டிலிருந்து சுமார் 290,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளையும்  1,800 ரூபாவையும்  கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவரது 06 பிள்ளைகளில் மூவர் தனியார் வகுப்புக்குச் சென்ற அதேவேளை, மனைவி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், சுங்க அதிகாரியும்  வெளியில் சென்று பத்திரிகை வாங்கி வந்தபோது, அவரது வீட்டிற்கு முன்பாக வான் ஒன்று நின்றது.

திடீரென வானிலிருந்து  இறங்கிய ஒருவர் 'நீங்கள் சுங்க அதிகாரியாக பணியாற்றுபவரா? எனக் கேட்டுள்ளார். அவர்; 'ஆம்.' எனத் தெரிவித்ததை அடுத்து,  அந்த நபர் கைத்துப்பாக்கியை சுங்க அதிகாரியின் வயிற்றில் வைத்து எச்சரித்தவாறு அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இன்னொரு நபர் ரி ௫6 ஐ காண்பித்து அச்சுறுத்தியுள்ளார்.  வீட்டிற்குள் புகுந்த 03 நபர்கள்,  சுங்க அதிகாரியையும் வீட்டிலிருந்த ஏனைய பிள்ளைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அங்கிருந்த தங்கநகைகளையும் பணத்தையும்  கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இக்கொள்ளளைச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .