2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கசினோவுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


சீதுவை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கசினோ சூதாட்ட நிலையங்களுக்கு எதிராக சீதுவை கொட்டுகொட வீதி, பள்ளிய சந்தியில்  காலை 9 மணி முதல் 10 மணிவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

சீதுவை கத்தோலிக்க மெத்தடிஸ் தேவாலயத்தைச் சேர்ந்த அருட்தந்தையரின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்ட இப்பேரணியில் ஈடுபட்ட பிரதேசவாசிகள் கசினோவுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

சீதுவை பிரதேசத்தில் கசினோ சூதாட்ட நிலையங்கள் சில செயற்படுவதன் காரணமாக பிரதேசத்தைச் சேரந்த இளைஞர்களும் யுவதிகளும் சூதாட்டம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தவிர்ப்பதற்காக உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள் கோரிக்கையாக முன்வைத்தனர்.

அண்மையில் இந்த பிரதேசத்தில்  இயங்கும் கசினோ நிலையத்திலிருந்து 21 யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .