2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'மொழியுரிமை' தொடர்பான பிராந்திய கருத்தரங்கு

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.சாஜஹான்


 'தமிழ்மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம்' என்ற தொனிப் பொருளில் மொழி உரிமை தொடர்பான பிராந்திய கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (1) நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் பி..ப 3.00 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.

மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், ஊடகச் செயலாளர் எஸ்.விஜேந்திரன், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் என்.கணேசலிங்கம், தற்போதைய அதிபர் திருமதி புஷ்பராணி, பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச தமிழ் ஆர்வலர்கள், அரச மற்றும்  தனியார் ஊழியர்;கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் பொது நிர்வாகத்தில் தமிழ் மொழி அமுலாக்கல்  என்ற தலைப்பில் மோ.நெல்சன்,  'கல்வித் துறையில் தமிழ் மொழி அமுலாக்கல்' என்ற தலைப்பில் சி.சரவணபவானந்தன், 'நீதித்துறையில் தமிழ் மொழி அமுலாக்கல்' என்ற தலைப்பில் சட்டத்தரணி தம்பையா ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் சட்டத்தரணி  தம்பையாவின் வழி நடத்தலில்; சபையோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .