2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஜெலி மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2014 ஜூன் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட். சாஜஹான் 

நீர்கொழும்பு – ஏத்துக்கால கடற்பகுதியில் ஜெலி மீன்களின் தாக்கம் காணப்படுவதன் காரணமாக  கடலுக்கு  குளிக்க வரும் பொதுமக்கள் இதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்கொழும்பு சுற்றறுலாத்துறை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜெலி மீன்களின் தொடுகையினால் இதுவரை நான்குபேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த மீன்கள் விசத்தன்மை கொண்டவையாக இருப்பதன் காரணமாக பாதிப்புக்கள்; ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாவது,

'ஜெலிமீன் பட்ட இடத்தில் எரிவு, நோவைத் தொடர்ந்து தோலில் கடி ஏற்படும். இதனைத் தொடர்ந்து தோல் வீங்கி சிவப்பு நிறமாகத் தோன்றும். பெரிய ஜெலி மீன்கள் மனிதனைத் தாக்கும்போது அவற்றின் வால்கள் தோலில் பதிந்து நீண்ட அடையாளங்களை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் கால், கைகள், இடுப்புப்பகுதி மற்றும் ஆணுறுப்புப் பகுதிகளில் அதிகமான தாக்கம் ஏற்படுகின்றது.

சிலருக்கு தோல் தாக்கத்தையும் தாண்டி வயிற்று நோ, வாந்தி, கைகால் விறைப்பு, தசைநோ மற்றும் சுவாசிக்க இயலாமை மயக்கம் என்பன ஏற்படலாம்.

இவற்றிற்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்படாவிடின் உயிருக்கே ஆபத்தான நிலையும் ஏற்படும்' என தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .