2025 ஜூன் 21, சனிக்கிழமை

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவை எதிர்வரும் 25  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியர், நீதிமன்றில் ஆஜராகி, ரொயிஸ் விஜித்த பெர்னாந்து காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்ததையடுத்து, அவருக்கு வைத்தியசாலையில் உரிய சிக்கிச்சை வழங்குவதற்கு நீதவான் அனுமதியளித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி   நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும்  வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைத்து ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வர் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.

அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கைது செய்யப்பட்டார்.

அதற்கு முன்னதாக  சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .