2025 ஜூன் 21, சனிக்கிழமை

தலைமைத்துவ பயிற்சி

Kogilavani   / 2014 ஜூலை 14 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தேசிய இளைஞர்கழக சம்மேளனமும் ஒன்றினைத்து நடத்திய இளைஞர் கழக மாவட்ட சம்மேளன நிர்வாக குழு பிரதி நிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பட்டங்கல பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறிக்காக இலங்கையின்  அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர், உப தலைவர், உபசெயலாளர், பொருளாளர், அமைப்பாளர், உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருத்தனர்.

மூன்று நாட்களை கொண்ட இப்பயிற்சி நெறியின்போது வெளிகள செயற்பாடுகள், உடற்பயிற்சிகள், தலைமைத்துவ பண்புகள் மற்றும்  தலைமைத்துவம் மற்றும் ஆளுமை அபிவிருத்தி, தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான விளக்கம் மற்றும் அறிக்கை முகாமைத்துவம்  தொடர்பாக விரிவுரைகளும் வழங்கப்பட்டதுடன் இளைஞர் கழகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலத்;துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .