2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2014 ஜூலை 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு பான்கடை சந்தியில் இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, பொல்வத்தை, மினுவாங்கொடையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அனுர பிரியந்த (35 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 இவ்விபத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில் புரிபவராவார். இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பாரவூர்தியின் சாரதியான ஜா- எல பிரதேசத்தைச் சேர்ந்த ஜுட் ரோஹித பெரேரா  கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .