2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் ஒன்பது மாத குழந்தை பலி

Thipaan   / 2014 ஜூலை 21 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத குழந்தையொன்று பலியாகியதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெரியமுல்லை, ஜும்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

விபத்தில் மரணமடைந்த  குழந்தையுடன் குழந்தையின் தாயும் பாட்டியும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதான வீதியில் வைத்து பிரபல ஆடை விற்பனை நிலையம் அருகில் அந்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து குழந்தை வெளியே விழுந்துள்ளது.

இதனை அடுத்து காயமடைந்த குழந்தை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .