2025 ஜூன் 21, சனிக்கிழமை

விஹாரையில் வளர்ந்து திருடனாக மாறிய இளைஞன் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் ஆளில்லாத வீடுகளுக்கு நுழைந்து, அங்குள்ள நகைகளையும் பணத்தையும் மற்றும் இலத்திரனியல் பொருட்களையும் திருடி வந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், திருடப்பட்ட 10 இலட்சம்  ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. ஏம். சமன்திலக்க நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

நீர்கொழும்பு, ஆடியம்பலம, சன்சைட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஜயசூரிய ஆராச்சிகே சாலிய மதுசங்க என்ற சந்தேக நபரே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ( 25) நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

சந்தேக  நபர் சிறு வயதாக இருக்கும் போது அவரது தந்தை, தாயை விட்டு பிரிந்து மூனறாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனை அடுத்து தாய் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர்  சிறுவனாக இருந்த சந்தேக  நபர் தாகொன்னையில் உள்ள விகாரை ஒன்றில் வளர்நது வந்துள்ளார்.

இளைஞனான பிறகு அவருக்கும் யுவதி ஒருவருக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. காதலியின் பெற்றோர்களுக்கு  கடன் தொல்லை இருந்துள்ளது. சந்தேக நபர் வியாபாரம் செய்வதாக காதலியிடமும் காதலியின் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளதால், காதலியின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக அவர் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் காதலியை அவர் பதிவுத் திருமணம் செய்துள்ளார். பின்னர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் திருமண வைபவத்தை  நடத்தியுள்ளார். திருமணத்திற்கு தேவைப்படும் பணத்திற்காக் அவர் வீடுகளில் திருட்டியுள்ளார்.

விஹாரையில் தங்கியிருந்த சந்தேக நபர் திருமனத்தின் பின்னர் விஹாரைக்கு அருகில்  வீடொன்றை வாடகைக்கு  பெற்று மனைவியுடன் வசித்து வந்துள்ளார். திருமணத்தின் பின்னரும் விஹாரையுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

விஹாரையிக்கு பக்தர்கள் குடும்பத்துடன் வரும் போது, அவர்களின் வீட்டில் ஒருவரும் இல்லாததை அறிந்து அந்த வீடுகளுக்குச் சென்று திருடியுள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடும் பகுதிகளுக்குச் சென்று வாடகைக்கு அறை பெறுவதைப் போன்று நடித்து ஆட்களில்லாத அறைகளை உடைத்து அங்குள்ள நகை, பணம் என்பவற்றை திருடி வந்துள்ளார். தனது திருடுவதற்காக அவர் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றை பயன்படுத்;தியுள்ளார்.

 இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரினால் திருடப்பட்ட நகைகள் , தொலைக் காட்சிப் பெட்டிகள், ஹோம் தியேட்டர், வீடியோ கமரா, டிஜிட்டல் கமரா உட்பட மேலும் சில இலத்திரணியல் உபகரணங்களையும் , பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நான்கு திருட்டுக்களையும், கட்டுநாயக்க பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாடகை அறைகளில் ஐந்து திட்டுக்களையும், சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மூன்று திருட்டுக்களையும் செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த இரண்டு வருட காலமாகவே இந்த திருட்டுச் செயல்களில் ஈடுபட:ட வந்துள்ளதாகவும் , மனைவியின் பெற்றோருக்கு தான் ஒரு வசதி படைத்த வர்த்தகர் என்பதை காண்;பிப்பதற்காக தொடர்ந்து திருட்டுக்களில் ஈடுபட வேண்டி வந்துள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நீரகொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே. ஏம்.சமன்திலக்கலின ஆலோசனையின் பேரில் தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் விக்ரமசிங்க தலைமையில், சார்ஜன்ட் எம். ரிஸ்மி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான சாமர, பண்டார ஆகியோரைக் கொண்ட குழுவினர்; சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு பொருட்களை  மீட்டுள்ளனர்.

அத்துடன் அவர் திருட்டுக்களுக்கு பயனபடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .