2025 ஜூன் 21, சனிக்கிழமை

கருச்சிதைவு : பெண் மரணம்

George   / 2014 ஜூலை 27 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கருச்சிதைவு செய்ய முயன்ற பெண் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை (25)  உயிரிழந்துள்ளார்.

காம்பிலியாவ, ஜனபதய, படல்கம, பிரதேசத்தை சேர்ந்த குலதிலக்க அத்தநாயக்க முதியான்சலாகே சுவர்ணா நந்தனி குலதிலக்க  என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின்  தாயாரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம், கருச்சிதைவு மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்டதென   நீர்கொழும்பு உதவி சட்ட வைத்திய அதிகாரி மலிந்த த சில்வா கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட  பிரேத பரசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம்  தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மரணமடைந்த பெண் ஏற்கனவே திருமணமாகி  கணவனை இழந்தவராவார். இரண்டு வருடங்களுக்கு முன்னர்  அவர் குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளர். அங்கு இலங்கையர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் கருவுற்ற நிலையில்  அந்த நபருடன் இலங்கை வந்து அந்த குழந்தையை பெற்றுள்ளார்.

தற்போது அந்த குழந்தையின் வயது  ஒன்பது மாதமாகும். ஆயினும், இருவரும்  சட்ட ரீதியாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்,  மீண்டும் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

கடந்த  புதன்கிழமை (23) மெல்லவகெதர பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு  சென்று வைத்தியர் ஒருவரிடம்  சுகயீனத்திற்காக சிகிச்சைப் பெற்றுள்ளார். இதனையடுத்து அடுத்தநாள் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அவருக்கு கடும் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த அந்த வைத்தியரிடம் அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியர் தான் வழங்கிய மருந்தை மீளப் பெற்றுக் கொண்டு உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில்   குறித்த பெண்ணை அனுமதிக்குமாறு கூறியுள்ளார் .

இதனையடுத்து குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது குறித்த பெண் கருகலைப்பு  செய்தமையினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொடதெனியாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .