2025 ஜூன் 21, சனிக்கிழமை

துவிச்சக்கர வண்டி - வான் விபத்தில் முதியவர் பலி

George   / 2014 ஜூலை 29 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு பெரியமுல்லையில் பகுதியில்  துவிச்சக்கர வண்டியின் மீது வானொன்று மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் நீரகொழும்பு பெரியமுல்லை. ஜும்மா மஸ்ஜித் வீதியில் ஜும்மா பள்ளிவாசல் அருகில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் பெரியமுல்லை , லாஸரஸ் வீதியைச் சேர்ந்த ஸாஹுல் ஹமீத் முஹம்மத் ஜவ்பர் என்ற 64 வயது நபரே மரணமானவராவார். இவர் நான்கு பிள்ளளைகளின் தந்தையாவார்.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

 சம்பவத்தை அடுத்து வேன் சாரதியான பெரியமுல்லை ஜும்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த முஹம்மத் உவைஸ் என்ற 58 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோன்புப் பெருநாளைக்காக பெரியமுல்லை பிரதேசவாதசிகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

நீர்கொழும்பு பொலிஸார் இந்த விபத்து  தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .