2025 ஜூன் 21, சனிக்கிழமை

வரிப்பண தொகையை குறைப்பதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு: நீர்கொழும்பு மேயர்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட் ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையினால்   இவ்வருடம் முதல் அறவிடப்பட்டு வரும்  அதிகரித்த வரிப்பணத் தொகையை  குறைப்பதற்கு   வியாழக்கிழமை (07) மாநகர சபையில் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.

வரிப்பணத் தொகையை  குறைப்பதற்கான விசேட பிரேரணையை நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர சமர்பித்தார். அதனை எதிர்கட்சித் தலைவர் கெலிசன் ஜயகொடி வழிமொழிந்தார்.

இன்றைய தினம் மாநகர சபையில் ஓகஸ்ட் மாதத்திற்கான  அமர்வு இடம்பெற்ற போதே விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரேரணை மாகாண சபையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 இதன்போது மேயர் அன்ரனி ஜயவீர உரையாற்றுகையில்,

'புதிய வரி அறவீட்டின் அடிப்படையில் வீடுகளுக்கு அறவிடப்படும் 7 சதவீத வரிக்கட்டணத்தை 5 வீதமாகவும், வியாபார நிலையங்களுக்கு அறவிடப்படும் வரிக்கட்டணத்தை 16 சதவீதத்திலிருந்து 13 வீதமாக குறைப்பதற்கான  பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப் பெற்றே இந்த வரி குறைப்பு பிரேரணையை  சமர்ப்பிப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் இந்த வருடம் இவ்வரி குறைப்பை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  2014 ஆம் ஆண்டுக்கான அதிகரித்த வரியை செலுத்தியவர்களுக்கு 2015 ஆம் ஆண்டில்  அவர்கள் செலுத்த வேண்டிய வரி அறவீட்டின் போது,  அதிகரித்த கட்டணத்தை கழித்து வரி அறிவிடப்படும்' என குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .