2025 ஜூன் 21, சனிக்கிழமை

மின்விசிறிகள் செயலிழந்தமையால் நோயாளிகள் அவதி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் நான்காம் விடுதிகளில் மின்விசிறிகள் செயலிழந்துள்ளமையினாலும் கழற்றப்பட்டுள்ளமையினாலும்   அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளிகள்  பெரும் சிரமங்களுக்குள்ளாவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வைத்தியசாலையில் தமது உறவினர்களை அனுமதித்துள்ள பொதுமக்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் மூன்றாம் நான்காம் விடுதிகளில்  மின்விசிறிகள் பல செயலிழந்தும், மேலும் சில மின்விசிறிகள் கழற்றப்பட்டும் காணப்படுகின்றன.

ஆண்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நான்காம் விடுதியில் மூன்று விசிறிகள் செயற்படாமலும் மேலும் மூன்று விசிறிகள் கழற்றப்பட்டுமுள்ளன.

அதேபோன்று, பெண்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் மூன்றாம் விடுதியிலும் இதேநிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்ற நிலை வைத்தியசாலையின் ஏனைய சில விடுதிகளிலும்; காணப்படுகிறது.

செயலிழந்துள்ள மின்விசிறிகளை பழுதுபார்க்கவும் கழற்றப்பட்டுள்ள மின்விசிறிகளுக்கு பதிலாக புதிய மின்விசிறிகளைப் பொருத்தவும் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .