2025 ஜூன் 21, சனிக்கிழமை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள் விஜித்த பெர்னாந்து தனது தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள  நகைக் கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, மரணமடைந்த தனது தாயாருக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.

நீர்கொழும்பு , குரணையில் அமைந்துள்ள  அவரது இல்லத்தில் அவரது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அவர் அழைத்து வரப்பட்டு அவரது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார். குறுகிய நேரம் இதற்காக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தாயார் கடந்த சனிக்கிழமை (30) இரவு காலமானார். இறக்கும் போது அவரது வயது 85 ஆகும்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சாரபில்  மேல் மாகாண சபையில் கம்பஹா மாவட்டத்தில்  போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்றவராவார்.  

இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி;  பிரதான அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவருமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .