2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாவை எம்.பிக்கு பிரபா வாழ்த்து

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தழிழரசுக் கட்சியின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை, கொழும்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக,  தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் இன்று(08) தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தெரிவித்ததாவது,

பெரியவர் மாவை சேனாதிராஜா நெகிழ்வான போக்கைக் கொண்டவர். இந்த நெகிழ்வான போக்கினால் பலவிதமான வெற்றிகளையும் கண்டவர் அவர்.  இப்படியான ஒருவருக்கு தமிழரசுக் கட்டியின் தலைமைப் பதவி கிடைத்திருப்பது வடபகுதி மக்கள் செய்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழரசுக் கட்டியின் தலைமைத்துவம் என்பது சர்வதேச ரீதியாக மட்டுமல்ல இந்நாட்டின் இன்றைய இன பிரச்சினை தீர்வில் முக்கியமான கட்டமுமாகும்.

அவருக்கு இந்த தலைமைத்துவத்தை ஏற்று நடத்துவதற்கான அத்தனை தகுதிகளும் பண்பும் உண்டு என்று நான் நினைக்கின்றேன்.
பதவியேற்றவுடனேயே உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சாத்வீக முறையில் போராடப் போவதாக அறிவித்துள்ளார்.

இது வரவேற்க வேண்டிய ஒரு விடயமாகும். அதே நேரம் சாத்வீகத்தோடு கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் சேர்த்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

விட்டுக் கொடுப்பதால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை என்பது மாவைக்கு நன்றாகத் தெரியும். இதனால் வட பகுதி மக்கள் மேலும் பலவிதமான நன்மைகளை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .