2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி: சாரதிக்கு பிணை

Gavitha   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

வான் ஒன்றுடன் மோதி வயோதிபர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வான் சாரதியை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஜி. எம்.திலகரத்ன பண்டார செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

முஹம்மத் ரிஸ்மி (35 வயது) என்ற பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகன சாரதியே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இம்மாதம் 10ஆம் திகதி கொச்சிக்கடை, போருதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில், போருதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய முஹம்மத் மூஸின் என்பவரே உயிரிழந்தவராவார். இவர் கண் பார்வை குறைபாடுடையவராவார்.

விபத்து இடம்பெற்ற அன்று காலை சந்தேக நபரான வாகன சாரதி வாகனத்தை பின்னால் செலுத்திய போது, வான் குறித்த வயோதிபரின் மேல் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து வாகன சாரதி கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீரகொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, செவ்வாய்;க்கிழமை (16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, வாகன சாரதியை பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சட்டத்தரணி எம்.பி.எம். மாஹிர் வாகன சாரதி சார்பில் ஆஜரானார். எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .