2025 ஜூன் 21, சனிக்கிழமை

சட்ட அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்: டக்ளஸ்

Thipaan   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியாயத்தினதும் சட்டத்தினதும் அடிப்படையிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(18) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற, சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ் - கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்துக்கு புறம்பாக தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாது. இருந்த போதிலும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணத்தினால் நீங்கள் எதிர்நோக்கி வருகின்ற வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதும் நியாயமானதுதான். இருந்த போதிலும் இவ்விடயத்தில் நியாயத்தினதும் சட்டத்தினதும் அடிப்படையில் தான் தீர்வு காணப்படல் வேண்டும்.

அதைவிடுத்து மாற்றுவழிகளில் ஒருபோதும் உரிய தீர்வினைக் காணமுடியாது. எனது நேர்மையானதும், உண்மையானதுமான அரசியல் நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வை பெற்றுத்தர முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

ஏற்கெனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து இதுவிடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அமைச்சர், அதன்பிரகாரம் கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் அதனை இலகுபடுத்தும் வகையில் நாளையதினம் இடம்பெறும் அமைச்சரவையிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணையாளரிடம் கலந்துரையாடியும் உரிய தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் பேருந்து உரிமையாளர்களது ஏனைய தேவைப்பாடுகள் பிரச்சினைகள் கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.    

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .